நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் / Nalamana Vazhvirku Nallor Sinthanaigal
₹54.00
இந்நூலைக் கற்போர்தம் மனம் மாசு நீங்கப் பெற்றுச் சிந்தனைத் தெளிவுபெறுவர், பிறரை நல்வழிப்படுத்தவும் துணை நிற்பர்.
இளைஞர் முதியோர் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் இந்நூல் எஞ்ஞான்றும் ஊன்றுகோல் போலும் கலங்கரை விளக்கு போன்றும் துணை நின்று நல்வாழ்வு வாழப் பெரிதும் வழிகாட்டியாய் அமையும் என்பது திண்ணம்.மக்கள் கல்வியறிவு.நற்பண்புகள்,நல்லொழுக்கம் போன்ற தகுதிகளைப் பெற்றுச் சிறந்த குடிமக்களாக வாழ்ந்து சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் பயன்படுவோராகத் திகழ வேண்டும். நம் முன்னோர்கள். அறிஞர்கள். சான்றோர்கள். கல்வியாளர்கள், தலைவர்கள், ஆன்மிகவாதிகள். புரட்சியாளர்கள் போன்றோர் அவ்வப்போது கூறியுள்ள கருத்துக்கள் எக்காலத்தவர்க்கும் எந்நாட்டவர்க்கும் ஏற்புடைத்தாகும்.
எதிர்காலத்தில் நமது சிந்தனைகளும் மக்களால் ஏற்றுப் போற்றிப் பின்பற்றக் கூடியவைகளாக விளங்கலாம். எனவே நாமும் பலதுறை ஆற்றல்களைப் பெற்று உலகு போற்ற வாழலாம்.