விடிவெள்ளி விவேகானந்தர் / Vidivelli Vivekanandhar
₹67.00
இந்திய மக்களிடம் மகத்தான சுதந்திர உணர்வை ஏற்படுத்திய முன்னோடி விவேகானந்தர். இந்திய மக்களுக்கு கல்விப்பணி, குறிப்பாக, தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றி நன்குணர்த்தியவர். பெண் விடுதலையை நேசித்தவர். மிகச் சிறந்த படிப்பாளி. இலக்கிய அறிஞர். இசைஞானமும் பாடும் திறனும் கொண்ட கலைஞானி.
சிக்காகோ உரையின் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை வானளாவ உயர்த்தியவர், இந்தியாவில் இனி உழைக்கும் மக்களின் ஆட்சி வரும் என்று முன்னறிவித்தவர்.
அவர் இந்திய இளைஞர்களின் எழுச்சி கீதம். படிக்க, சிந்திக்க, பயனுள்ள நூல் இது.