நவீன ஆத்திசூடி / Naveena Aathichoodi
₹60.00
‘நவீன ஆத்திசூடி’ என்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் திரு. தி.ரோஸ்லின் சுரேஷ் அவர்கள் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் 04-05-1968இல் திரு. அ.தியாகராஜன் – திருமதி ரெஜினா ராதாபாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
தன்னுடைய ஆரம்பகால பள்ளிப்படிப்பை பழனி திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியிலும் உயர்நிலை மேனிலைக் கல்வியை நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கீரனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
தன்னுடைய B.Sc., M.A., M.Phil., ஆகிய பட்டப்படிப்புகளை பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியிலும் B.Ed., படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் படித்த இவர், தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை செய்து வருகிறார்.
இவர் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பல்வேறு படைப்புகளைப் படைத்து உள்ளார். தற்போது பொள்ளாச்சி ஸ்ரீராமு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.