தமிழ் நாவல்கள் : பண்பாட்டு எழுத்து
₹459.00
இரா. காமராசு (1970): திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலவாசல் எனும் ஊரில் பிறந்தவர். படைப்பிலக்கியத்திலும் இலக்கியத் திறனாய்விலும் பல நூல்களைப் படைத்துள்ளார். நாட்டுப்புறவியல், சமூக வரலாறு. பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றுகிறார். எழுத்து, பேச்சு, பயணங்கள் ஊடாக மக்கள்திரள் பண்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
நிலம், பால், சாதி. வர்க்கம் சார்ந்து ஒடுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் நிற்கும் வெகுமக்களின் பண்பாட்டு வாழ்வைத் தமிழ் நாவல்களின் நெடிய பரப்பிலிருந்து கவனப்படுத்துகிறது இந்நூல். நிலத்தோடும் வரலாற்றோடும் கூடிய பண்பாட்டு எழுதுகையாகப் படைப்பிலக்கியங்கள் முகிழ்ப்பதன் சான்றாகவும் அமைகிறது.