சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள் / Siruvargalukkaana Jappaaniyap Pazhangadhaigal
₹75.00
சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்
இந்நூலின் ஆசிரியர் சொ.மு.முத்து அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே மாத, வார இதழ்கள் படிக்கும் பழக்கத் தால் எழுத்தார்வம் ஏற்பட்டு, சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர். சினிமாத் தொழிலிலும் ஈடுபட்டார். தமிழறிஞர் வ.ரா.தலைமையில் கோவையில் நடை பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும், அறிஞர் அண்ணா தலைமையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் பங்கேற் றார். ‘பாரதி’ என்றொரு கையெழுத்துப் பிரதி இதழை நடத்தி அண்ணா, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ஆகியோரிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளார். ஜப்பான் மொழியில் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி யதற்காக ஜப்பான் அரசு சொ.மு.முத்து அவர்களின் தபால் தலையை வெளியிட்டுக் கௌரவித்தது. மகாகவி பாரதியின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள், ஜப்பானிய தேவதைக் கதைகள், வள்ளலாரின் குரல் ஆகிய நூல்களைப் படைத்தமைக்காகத் தலைசிறந்த தமிழறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்.