வர்க்கப் போராளியின் வரலாற்றுச் சுவடுகள் / Varga Poraliyin Varalatru Suvadugal
₹130.00
ISBN : 9788123410500
Author : Manavai T. Indrajith
Weight : 100.00 gm
Varga Poraliyin Varalatru Suvadugal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2006
Code no :A1477
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் கோபு அவர்கள் மாணவராக இருந்தபோது ‘பைந்தமிழ் இளைஞர் கழகம்’ என்ற அமைப்பின் சார்பில் ‘பைந்தமிழ்ச் சாரல்” என்ற கையெழுத்து ஏட்டை நடத்தியிருக்கிறார். அவரது வரலாறு பற்றி ஒரு நூல் வெளியிட்டிருக்கிற என் அன்பு நண்பர் தோழர் த.இந்திரஜித், எம்.ஏ. அந்த நூலின் 32ஆம் பக்கத்தில் எழுதியிருப்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
“நாகையில் கோபு தங்கிப் படிப்பைத் தொடர்ந்தார். சென்ற இடத்தில் எல்லாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் கிரியா ஊக்கியாகவே கோபு இருந்தார். எல்லோரும் கல்வியறிவு பெறும் வகையில் ‘நூலகம்” ஒன்றையும் நண்பர்களுடன் சேர்ந்து கோபு தொடங்கினார். நூல்களை வாசிக்க வாசிக்க சிந்தனையில் புதிய பரிமாணம் ஏற்படுவதைக் கோபுவால் உணர முடிந்தது.”
கலைஞர் மு.கருணாநிதி
(15 அக்டோபர். 2005 முரசொலியில் எழுதியது)
எந்த இடத்தில் கொடுமை நடந்தாலும், எதிர்த்து நிற்கும் நல்ல போராளி ஏ.எம். கோபு. வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்மீது குண்டுபாய்ந்து. அவரின் வலது கரத்தில் குண்டுச் சிதறல் இன்னும் இருக்கிறது. அப்படிப்பட்டப் போராளியின் வரலாற்றுச்சுவடுகளைப் பதிவு செய்வது காலத்தால் பாராட்டத்தக்கது.
ஆர்.நல்லகண்ணு