வாழ்வில் வளம்பெற வள்ளுவம் / Vaazhviyal Valampera Valluvam
₹405.00
Category : Self Help , Essay
ISBN : 9788123442495
Author : P. Poornalingam
Weight : 100.00 gm
Binding :Hard Bound
Language : Tamil
Publishing Year : 2022
Pages : 320
Code no : A4602
திருக்குறளுக்கு மேலும் ஒரு உரையா எனப் பலர் வினவக்கூடும். இது உரையல்ல: உரைகல்! இன்றைய வாழ்வியல் நிகழ்ச்சிகளின் மூலம் திருக்குறளின் உயரிய கருத்துகளை எளியமுறையில் விளக்கும் நூல் இது. ஆசிரியரைக் கவர்ந்த நூறு குறட்பாக்களுக்கான விளக்கத்தின் வாயிலாகத் திருக்குறள் கூறும் வாழ்வியலை வெளிக்கொணரும் ஒரு முயற்சி. ஓரளவு தமிழ் கற்றவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும்வண்ணம் அமைந்துள்ளது.
அறத்துப்பால், பொருட்பால் இரண்டினுமிருந்து நூறு குறட்பாக்களைத் தெரிவு செய்து, அவற்றின் அரும் கருத்துக்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்வண்ணம், பல்வேறு சான்றுகளுடன் விவாதித்திருக்கிறார் ஆசிரியர். எந்தக் காலகட்டத்துக்கும் பொருந்தும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் திருவள்ளுவரின் கருத்துக்களை, வரலாற்றிலிருந்தும், தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். இந்த அணுகுமுறை திருக்குறளின் கருத்துக்களை அனைவரும் எளிதில் நினைவில் நிறுத்தும்வண்ணம் அமைந்துள்ளது.
திருக்குறளின் உயரிய அறிவுரைகளைத் தமிழர்களாகிய நாம் நன்கறிந்து, அவற்றினைப் பின்பற்றித் தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல் அனைவரும் தவறாமல் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று.