‘பலப்பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்க வேண்டியவைகளை உருவாக்க பலப்பல நூற்றாண்டுகள் பிடிக்கும். இலக்கியத்தில் உன்னதமான படைப்பாக்கங்கள் உருவானதெல்லாம் வரலாற்றின் மகத்தான காலகட்டங்களில்தான்.’ சமூகமும், இலக்கியமும், எப்படியெல்லாம் ஒன்றையொன்று மேம்படுத்திக் கொள்ள மூடியும் என்பதற்கு லத்தீன் அமெரிக்கா, குறிப்பாக கியூபா வாழும் உதாரணமாக விளங்குகிறது. இந்த ‘மாய்-யதார்த்தம்” எப்படி சாத்தியமாகியது என்ற கேள்விக்கு பதில் தேடுகிறது இந்த நூல்,