மடை திறந்து / Madai Thirandhu
₹67.00
கவிஞர் திராவிடமணி கல்லூரிப் பேராசிரியர். பல திறனாய்வு நூல்களைப் படைத்தவர். விடாமுயற்சியும், உழைப்பும், தேடலும் மிக்கவர். எதையும் துல்லியமாகச் செய்து முடிக்கும் திறனாளர், கவிதை முயற்சியிலும் வெற்றிபெறுகிறார். பல கவிதைகள் காட்சிப்படுத்தமாக கச்சிதமாக அமைந்துள்ளன. எளிய, இனிய மொழிதல்முறை கைகூடி வந்துள்ளது. நாட்டுப்புற மெட்டில் ஓசை நயம்பட உள்ள கவிதைகள் சிறப்பானவை.
கிளை ஆறுகளிலிருந்து விளைச்சல் நிலங்களுக்கு உயிர் ஆதாரமானப் பாய்ச்சலாய் இந்த மடைதிறப்பு. இன்னும் பெருநதி தீர மடைதிறப்பாய் இவர் கவிதைகள் பெருகட்டும். காவிரியின் கடைமடையில் பிறந்த இவரின் கவிதைகள் தமிழ்க்கவிதை வெள்ளத்தில் இரண்டறக் கலந்திடும்.
இரா.காமராசு