பூங்குயில் சிறுவர் பாடல்கள் / Poonguyil Siruvar Paadalgal
₹32.00
- ISBN : 9788188048854
- Author : Dr. Vasuki Jayarathnam
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2008
- Pages : 78
- Code no : AP130
பூங்குயில் சிறுவர் பாடல்கள் / Poonguyil Siruvar Paadalgal
கவிஞரைப் பற்றி…
ஆண் பெண் சமத்துவம் ஒன்றையே முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் முனைவர் திருமதி.வாசுகி ஜெயரத்னம்.பூங்குயில் சிறுவர் பாடல்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணிய ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் கல்வியியல் ஆய்வுக்கட்டுரைகள், இதழியல் ஆய்வுக்கட்டுரைகள், பொதுக் கட்டுைைரகள் எனப் பலப்பல எழுதியுள்ளார்.
கவிதை, சிறுகதை, நாடகம், குழந்தைக் கவிதைகள் எனப் பல்துறையிலும் தடம் பதித்துத் தமிழ்ப் பணியாற்றி வருபவர்.
‘பூச்சரம்’ ‘பாடும் பறவைகளே’ பூஞ்சிட்டு ஆகியவை இவரது குழந்தைக் கவிதை நூல்கள், பூங்குயில் (நான்காவது குழந்தைக் கவிதைத் தொகுப்பு உங்கள் கைகளில் தவழ்கிறது. வழித்துணையாய் வரும் பெருமாள் திருக்கோயில் (ஆய்வுநூல். சிகரம் நோக்கி (சிறுகதைத் தொகுப்பு) கவிதைச்சரம் (கவிதைத் தொகுப்பு) பெண்ணியச் சுவடுகள் (பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு நூல் விரைவில் வெளிவரவுள்ள இவரது படைப்புகள்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வெளியீடுகளான இந்தியப் பெண்கள் (வரலாற்று ஆய்வு நூல்) நடப்பியலில் வரதட்சணை நடைமுறைகள், சிறுகதைகளில் மகளிர் பிரச்சினைகள் ஆகிய ஆய்வு நூல்கள் இவரது பங்களிப்பில் வெளியானவை.
பத்து மாணவியர் இவரது நெறிகாட்டலில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள். நால்வர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். 45-க்கும் மேற்பட்ட மாணவியர் இவர் நெறிகாட்டலில் எம்ஃபில் ஆய்வும் முடித்துள்ளனர்.
தற்கால இலக்கியம், பெண்ணியம் சுல்வியியல், தாவலியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் வானொலிச் சொற்பொழிவாளகும் கூட ஆய்வுத் திறனும் சோர்வறியர் உழைப்பாற்றலும் மிக்கவர்.