பால் கூடாரம் / Paal kudaaram
₹108.00
ஆட்டனத்தி, தமிழ்நாடு வனத்துறையில், வனச் சரக அலுவலராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். காடு, மலை, விலங்குகள், தாவரங்கள், பறவைகள். ஆதி குடிகள், அவர்தம் பயிர்கள், உணவு, சடங்குகள், நம்பிக்கைகள், மருத்துவம் என்று பன்முக அறிவும் அனுபவங்களும் அவர் எழுத்தில் காணக்கிடைக்கும்.
‘பால் கூடாரம்’ அவரது வனப் பணி அனுபவங்கள் தந்த செய்திகளின், வாழ்க்கையின் நாவல் வடிவம். நீலமலையின் ஆதிகுடி சமூகத்தில் இருந்து, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு, முதுமுனைவர் பட்டப் படிப்பு என்று புறப்பட்டுப் போன யுவன், யுவதி இருவரின் சொந்த வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு இந்த நூல்,
நாஞ்சில்நாடன்