துன்ப வீணையும் ஆனந்த பைரவியும் / Thunba Veenaium Aanadha Pairavium.
₹54.00
தான் அனுபவித்த, கண்ட, காண விரும்புகிற ஒவ்வொரு விஷயமும் இவருக்குக் கருப்பொருள் ஆகின்றது.
உள் மன விளைச்சலும் உண்டு. புற உலக வியப்புகளும் உண்டு. சிலவேளை அசல் விஞ்ஞானமே கவிதை வடிவெடுப்பதும் உண்டு. இவருக்குத் தன்னைத் தொலைத்துக் கொள்வதை விடத் தம் நாடும் மக்களும் உறவும் நட்பும் செழிப்பதும் தழைப்பதும் தான் முக்கியம். அதற்காகவே கவிதை என்ற வடிவத்தைப் பயன்படுத்துகிறார். இந்தியா 2020 போன்ற நூல்களில் ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியை அவாவும் அறிவியல் மனம் தொழிற்படுகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் சிந்தனைப் பொறிகளாக
இவர் வார்த்துத் தரும் கவிதைகளில் வெற்றிகளில் திளைப்பும், தோல்விகளில் நம்பிக்கையும், சாதனைகளின் குதூகலிப்பும் தேடல்களின் தவிப்பும் மண்டிக் கிடக்கின்றன.