ஜீவாவின் தமிழ்ப்பணி (ஜீவானந்தம் அறக்கட்டளை தொடக்கச் சொற்பொழிவு)
₹45.00
ஜீவாவின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பிலான இந்நூல் கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டகம் நிறுவியுள்ள “ஜீவானந்தம் நூற்றாண்டு விழா’ அறக்கட்டளை தொடக்கச் சொற்பொழிவு ஆகும். ஜீவாவினால் பொதுவுடைமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவரும், அவர் காட்டிய வழியில் தமிழ்ப் பணியாற்றி வருபவரும், என்.சி.பி.எச். நூல் வெளியீட்டகத்தோடு தொடக்கக் காலம் முதல் ஆதரவாளராகவும் ஆலோசகராகவும் இருந்துவருபவரும். வளர்த்த முக்கியத் தோழர்களில் ஒருவராகவும் விளங்கும் தோழர் ஆர்.பார்த்தசாரதி அவர்களால் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
ஜீவாவின் நீண்ட நெடுங்கால அரிய பணியைக் குறிப்பாகத் தமிழிலக்கியப் பணியைத் தொட்டுக்காட்டுவது இச்சொற்பொழிவு. வருங்காலத் தலைமுறையினர் ஜீவாவைப் பற்றி விரிந்து பரந்த ஆய்வு மேற்கொள்ள உதவும்.