ஒரு நெய்தல் நிலத்தின் கதை
₹170.00 ₹153.00
ISBN : 9788123415871
Author : Kandhasamy Muthu Rajah
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A1979
Pages : 270
ஒரு நெய்தல் நிலத்தின் கதை
தொழில்நுட்ப வீச்சுக்களால் உலகம் ஒரே கிராமம் ஆகியுள்ள இன்றைய சூழலில் தமிழ் இனத்தவரும் உலகத் தமிழர்கள் என்ற ஒரு பொது அடையாளத்தையும் கொண்டுள்ளனர். முத்துராஜா இலங்கையில் பிறந்தாலும் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வருகின்றார். தமிழியலில் முதுமாணிப் பட்டதாரி. தற்போது Ph.D, ஆய்வுத் துறையையும் மேற்கொள்ள உள்ளார். வளர்ந்துவரும் எழுத்தாளர்; கவிஞர்.
இவரின் “ஆழியவளை – யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமம் ஒன்றின் மரபும் மாற்றமும்” எனும் ஆய்வு நூல் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் விருதைப் பெற்றுள்ளது. “சுனாமி” எனும் கவிதைத் தொகுப்பு தற்போதும் விற்பனையில் உள்ளது.
“ஒரு நெய்தல் நிலத்தின் கதை எனும் இப்புனைவு வடிவும் முத்துராஜாவின் மூன்றாவது படைப்பாகும். இந்நாவல் சமூக மானிடவியலை ஆழமாகக் கொண்டுள்ளது. மனிதநேயம், ஒருமைப்பாடு முதலியவற்றுக்கு ஊக்கம் கொடுக்கின்றது. பரவலான வாசிப்பைத் தேடுகின்றது.