மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடல் / Marx – Ambedkar Thodarum Uraiyadal
₹250.00
Category : Marxism
ISBN : 9788123441061
Author : D. Raja
Weight : 100.00 gm
Marx – Ambedkar Thodarum Uraiyadal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2021
Code no : A4459
இயற்கை விதிபோல, மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியாத அதிகாரத்துடன் இந்தியாவில் தொழிற்படுகிறது சாதி என்கிறார் மார்க்ஸ். இதுதான் இங்கு முதலாளியத்துக்கு ஆதரவான நிலை. சமூகப் புரட்சி இன்றி, சோஷலிசப் புரட்சி நிறைவேறாது என்ற நிலைகொண்ட இந்தியாவில் ஒன்றின் வெற்றியால், | இன்னொன்று தொய்ந்து விடா வண்ணம், இரண்டையும் ஒன்றுக்கொன்று நெகிழச் | செய்து சமூகம் இரண்டிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கான கோட்பாட்டுருவாக்கத்தில் முக்கிய கவனம் பெறுகிறது| “மார்க்ஸ் – அம்பேத்கர் தொடரும் உரையாடல்” என்னும் இந்நூல்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா புரட்சிகர அரசியலாளர்; அடையாள அரசியலிலும், பண்பாட்டு அரசியலிலும் |தீவிரமாகப் பயணித்து வரும் மார்க்சியக் கோட்பாட்டாளர் பேராசிரியர் ந.முத்துமோகன். இவ்விருவரும் இணைந்து எழுதியுள்ள Marx and Ambedkar – | Continuing the Dialogue என்னும் இந்நூல் பேரா.ரகு அந்தோணி அவர்களின் | இயல்பான மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வருகிறது. மார்க்சியக் கருத்தியலுக்கும் அம்பேத்கரியக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளையும், அவற்றின் பொருத்தப்பாடுகளையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், இவ்விரண்டு சிந்தனைகளும் தோன்றிய வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்கிறது; சமயம் மற்றும் சாதியின் சமூக அந்தஸ்தையும், பங்களிப்பையும் கணக்கில் கொள்கிறது. வர்க்க – சாதி உறவுகளை விவாதிக்கும்போது, பண்டைச் சூழல்களுக்கும், இன்றையச் சூழல்களுக்கும் | இடையேயுள்ள வேறுபாடுகளையும், இன்று பேசப்படும் அடையாள அரசியலில் பொதிந்திருக்கும் வர்க்க, சாதி நலன்களையும் ஆய்வுக்குட்படுத்துகிறது. இந்த நோக்கத்தில்தான், மார்க்சியத்திற்கும், அம்பேத்கரியத்திற்கும் இடையே ஓர் உரையாடல் அவசியமென்பதை இந்த நூல் கூர்மையாக வலியுறுத்துகிறது.