Search

நோன்பு / Nonbu

130.00

ISBN : 9788123409474
Author : D. Selvaraj
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A1373

Qty
Compare

In Stock

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகிலுள்ள மாவடி எனும் சிற்றூரில் பிறந்தவர். புதுமைப்பித்தன், ரகுநாதன் வழியில் திருநெல்வேலி மாவட்டக் கிராமங்களை உயிர்ப்புடன் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஏழு நாவல்களையும்,
இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களையும் எழுதியவர். சரஸ்வதி, சாந்தி, தாமரை, செம்மலர் இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்தன. மலரும் சருகும், தேநீர், மூலதனம் முதலான புகழ்பெற்ற நாவல்களைத் தமிழுக்குத் தந்தவர்.
சாஹித்ய அக்காதெமி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘தோல்’ நாவல் 2011-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நாவல் விருதைப் பெற்றது.

தற்போது திண்டுக்கல்லில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார். நோன்பு எனும் இச்சிறுகதைத் தொகுப்பு திருநெல்வேலி
மாவட்டக் கிராமங்களில் நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் மனித நேயத்துடன் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குக் குரல் கொடுக்கிறது.

Back to Top