நுனிக்கொம்பர் நாரைகள் / Nunikombar Naraigal
₹80.00
ISBN : 9788123432946
Author : Devadevan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A3595
Pages : 100
இந்தக் கவிதைகளில் காணப்படும் வாதனைகளும் துயர்களுமற்ற வாழ்வினிமையை அடைவதற்காகத்தானே நமது பாடுகள் எல்லாம். வாழ்வின் மெய்மையை அறியாத நிலையில் எதுவுமே சாத்தியமில்லை.
இப் பூமியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு மேதையாகவும், இன்ப மலர்ச்சியை மட்டுமே அறிந்த பச்சைக் குழந்தையாகவும் மாறிவிட முடியும் என்பதையல்லவா கவிதைகள் நமக்குக் கற்பிக்கின்றன.
தண்ணீரில்லாமல் வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஒருவன் கவிதை இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது என்றான் ஒரு மகாகவி. மகா கவிதைதானே அது! மனிதர்கள் எல்லோரும் கவிதையால்தான் வாழ்கிறார்கள். கவிதையின்மையால்தான் துன்புறுகிறார்கள் என்னும் விஷயத்தை இக் கவிதைகளால் புரிந்துகொள்வோம்.
தேவதேவன்