சேற்றில் மலர்ந்த செந்தாமரை / Setril Malarntha Senthamarai
₹75.00 ₹67.00
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
தொ.மு.சி.ரகுநாதன் தமிழகம் நன்கறிந்த முற்போக்கு இலக்கியக்காரர். அவர் 1940களில் எழுதிய பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த மிகச் சிறந்த சிறுகதைகள் இதழ்களில் வெளிவந்து, பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட வெகுகாலத்திற்குப் பின்னரே, 1980-இல்தான் தொகுப்பாக அச்சேறின. இப்போது மறுபடியும் அச்சிடப்படுகின்றன
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தொ.மு.சி. ரகுநாதனின் ஆளுமை
வளர்ச்சியின் அனுபவங்களாகவும், அக்காலச் சமூக நிகழ்வுகளின் வரலாற்றுப் போக்கைப் படம்பிடித்துக் காட்டுவனவாகவும் உள்ளதை வாசகர் எளிதில் கண்டு கொள்வார்கள்.
இந்த அம்சம்தான் இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது, அவை உயிர்க் காட்சியாய் வாசகர்கள் உள்ளத்தில் எழுவதற் குக் காரணம். மற்றுமொரு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அம்சம்
சிறுகதைகளில் உள்ள மொழி, தமிழகத்தில் பல்வேறு வட்டார, சமூகக் குழுக் களின் பேச்சுவழக்கு மொழி. அதன் உயிர் தன்மையோடு இந்தச் சிறுகதை களில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.