கவிக்குயில் சரோஜினி தேவி / Kaviguil Sarojini Devi
₹85.00
அகவை அறுபதைத் தாண்டி நிற்கும் இந்நூலாசிரியர் எம்.ஏ.பழனியப்பன், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல், “வாலிப நெஞ்சங்களை வட்டமிடும் பிரச்சினைகள்” என்பதாகும். இந்நூல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.
பொதுவாழ்வுக்கான போராளி என்ற வகையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இந்நூலாசிரியர், தொழிற்சங்க கல்விபெற 1972-1973ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் மாஸ்கோ நகரில் பயிற்சி பெற்றவர்.
தனது வாழ்வைப் பொதுவாழ்வுச் சேவைக்காக அர்ப்பணித்து வரும் இவர். குழந்தைகளுக்கான கதைகள், புரட்சியாளர் வரலாறு பற்றிய நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதியும் வருகிறார் இவரது பணி தொடரட்டும்.