கறுப்பினக் காவியம்
இனவெறி கொண்ட வெள்ளையரின் கொடுமைகளை எதிர்த்த தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் போராட்டங்களில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தியாகிகளின் செயல்பாடுகள், கியூபா சகோதர உணர்வுடன் ஆப்பிரிக்க மக்களுக்குச் செய்த உதவிகள் உள்ளிட்ட பல வரலாற்றுச் செய்திகளைக் கறுப்பினக் காவியம் எனும் இந்நூலில் எளிய நடையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் மு. வீரபாண்டியன்.
தோழர் மு.வீரபாண்டியன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர். அதன் தேசியக் குழுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் எனப் பொறுப்புகள் வசித்தவர்; தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகச் செயலாற்றி வருபவர். “தொடர் பயணம்”, “விளையாட்டும். அதன் வரலாற்றுச் செய்திகளும்’ “கவித் துளிகள்” ஆகிய நூல்களை யாத்துள்ள மு.வீரபாண்டியன் ஜனசக்தி. தாமரை ஆகிய இதழ்களில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் சோவியத் யூனியன். கியூபா, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டவரும் கூட.