Search

உற்றுயிர்த்துத் தேடலாகி/ Utruuyirthuth Thedalagi

250.00

ISBN : 9788123440361
Author : J. Vijayarani
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4389

Qty
Compare

In Stock

கோப்புகளின் கையெழுத்துகளுக்கிடையே கவிதைத் தோப்புக்குள்ளும் விரலாற நடந்து வர வாய்த்த
ஒரு கவித்துவ மனசின் அகத் தமிழ் அடவுகளாகவே…
‘கவிதாயினி விஜயாராணி’ அவர்களின்
இந்த ‘உற்றுயிர்த்துத் தேடலாகி…” என்கிற தொகுப்பிலுள்ள கவிதைகளைப்
பார்க்கிறேன்.
சின்னச் சின்ன மேகங்களின்
செல்லச் செல்லச் சாரல்களாய்
இவரது கற்கண்டு கவிதைகள் ஆலங்கட்டி மழையாய் இறங்கி வந்து
நம் மனச்செடிகளை நனைத்து மகிழ்விக்கின்றன

கவிஞர் அறிவுமதி.

மௌனம் மகத்தானது. அன்பு அபரிமிதமாக வெளிப்படும்போது சொற்கள் தோற்றுப் போகின்றன. உள்ளத்தை உதடுகளால் மொழி பெயர்க்க முடியாதபோது சொற்கள் ஊனமாகிவிடுகின்றன. ‘நீயும் நானும்’ என்கிற கவிதையில் அளவற்ற அன்பின் முன்பு மௌனமாகி விடும் மனத்தை கவிஞர் பிரதிபலிக்கிறார். “ஒருமை” என்பது நேசமுடன் பழக ஆரம்பித்ததும் பிரியமுள்ள பெண்கள் காட்டும் நியாயமான எதிர்பார்ப்பு. தனிமையில் அமர்ந்து அமைதியாக வாழ்வின் நுட்பத்தை தரிசித்து
எழுதியிருக்கிறார்.

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

Back to Top